சகோதர நேசம் பாசம், காதலின் நேசம் பாசம் கலந்த இந்த வைகை நதியிலிருந்து, காதலை மட்டும் பிரித்து எடுத்து காதல் பாடலாக கேட்டால் என்னவென்று தோன்றியது...
இசைஞானியின் இசைநதியை எந்த வடிவத்தில் வடித்து சுவைத்தாலும் சுகம்...
நீண்ட இசைவெளிக்கு பிறகு இசைஞானியின் விஸ்வரூபம் வெளிப்பட்டது " அழகி " திரைப்படத்தில்....
பாடல்களிலும் சரி, பின்னணி இசையிலும் சரி..
ராஜாவின் இசை.... எண்பதுகளில் அவர் தந்த இசையை போல.. மனதில் நீங்கா இடம் பெற்று.. நெஞ்சினில் ரீங்காரம் இட்டுக்கொண்டே இருக்கிறது...
ஒளியிலே தெரிவது தேவதையா.? உயிரிலே கலந்தது நீ இல்லையா..?