14/07/2015

'மெல்லிசை மேதை'  M .S.விஸ்வநாதன்

வெளிய தெரியாத பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்  இந்த மாபெரும் இசை மேதை...
மக்கள் திலகமும், நடிகர் திலகமும்  நம்மில்  என்றும் நிலைத்திருப்பதற்கு,  இவரின் இசைக்கு மாபெரும் பங்குண்டு

தொழில்நுட்பம் வளராத காலத்திலேயே, அற்புதமான மெட்டுக்களை உருவாக்கி , வாத்தியங்களை வைத்து    இவர் செய்த ஜாலங்கள் கொஞ்சமல்ல...

M .G .R . க்கு ஒருவகை இசை   ...சிவாஜிக்கு ஒருவகை இசை,  ஜெமினிக்கு ஒரு வகை இசை.... ஸ்ரீதர், பாலச்சந்தர்  திரைப்படங்களுக்கு ஒரு இசை... இப்படி ஒவ்வொரு  வகையறாவுக்கும், ஒவ்வொரு  வகையான இசைஅமைத்த   மெட்டின் மேதை...

எத்தனையோ அற்புதமான  பாடகர்களை நமக்கு அருளிய  இசை வள்ளல்...

பாடல்களில் மட்டும் அல்லாமல்,  பின்னணி இசையின் மூலமும்  உயிர் கொடுத்து  பல படங்களை  வெற்றி பெற செய்திருக்கிறார்  இந்த  இசை ஜாம்பவான்..

தமிழ்நாட்டை பொறுத்தவரை  இசைக்கு  இரண்டு காலம் தான்

ஒன்று MSV காலம்,  இன்னொன்று இளையராஜா காலம்

SREENIVASANMUSIC.BLOGSPOT.COM

No comments: